search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகுகளை பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்த காட்சி
    X
    படகுகளை பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்த காட்சி

    வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று - மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

    வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் ஆயிரக்கணக்காக மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், பெரியகுத்்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நேற்றும் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து 3-வது நாளாக மீன்வர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து இல்லை. மக்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. சூறைக்காற்று ஓய்ந்து மீன்பிடிக்க செல்ல இன்றும் 3 நாட்களாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×