என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்6 Aug 2019 4:22 PM GMT (Updated: 6 Aug 2019 4:22 PM GMT)
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 604 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கல்லக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி, வண்ணாரப்பேட்டை, கீழஎசனை, கீழவண்ணன், ஏழேரி, இடையத்தான்குடி, வைப்பம், செம்மந்தங்குடி, சத்யா நகர், பாளையம், அருங்கால், அர்ச்சனாபுரம், கருவேலங்காடு, பாப்பான்குளம், சின்னப்பட்டாக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக செல்ல வேண்டும் எனில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்ல பஸ் வசதிகள் கிடையாது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட அனைத்து கிராமங்களுக்கும் மையமாக உள்ள கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
மேலும் கல்லக்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 604 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கல்லக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி, வண்ணாரப்பேட்டை, கீழஎசனை, கீழவண்ணன், ஏழேரி, இடையத்தான்குடி, வைப்பம், செம்மந்தங்குடி, சத்யா நகர், பாளையம், அருங்கால், அர்ச்சனாபுரம், கருவேலங்காடு, பாப்பான்குளம், சின்னப்பட்டாக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக செல்ல வேண்டும் எனில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்ல பஸ் வசதிகள் கிடையாது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட அனைத்து கிராமங்களுக்கும் மையமாக உள்ள கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
மேலும் கல்லக்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X