என் மலர்
செய்திகள்

போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் ஆஸ்பத்திரிகள் வேலைநிறுத்த போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
ஈரோடு:
இந்திய மருத்துவ கழகத்தை கலைப்பதை எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்று இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை நடந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
இன்று புறநோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு இன்று வழக்கம் போல் இயங்கின.
மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திர பிரபு கூறியதாவது:-
தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் ஆஸ்பத்திரியில் இன்று ஒரு நாள்அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை இன்றி அவதி அடைந்தனர்.
கோபி பகுதியில் உள்ள 50 தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று இயங்கவில்லை. அதே சமயம் அவசர சிகிச்சை வழக்கம்போல் நடந்தது.
தனியார் ஆஸ்பத்திரி ஸடிரைக் தெரியாமல் நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்திய மருத்துவ கழகத்தை கலைப்பதை எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்று இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை நடந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
இன்று புறநோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு இன்று வழக்கம் போல் இயங்கின.
மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திர பிரபு கூறியதாவது:-
தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் ஆஸ்பத்திரியில் இன்று ஒரு நாள்அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை இன்றி அவதி அடைந்தனர்.
கோபி பகுதியில் உள்ள 50 தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று இயங்கவில்லை. அதே சமயம் அவசர சிகிச்சை வழக்கம்போல் நடந்தது.
தனியார் ஆஸ்பத்திரி ஸடிரைக் தெரியாமல் நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story






