search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    கீழ்கட்டளையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

    கீழ்கட்டளையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    கீழ்கட்டளை சக்தி நகரை சேர்ந்தவர் பிச்சாண்டி (41). கட்டிட தொழிலாளி. நேற்று மதியம் இவர் ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். உடனே அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.

    உடனே அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரும் மடிப்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×