search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கும்பகோணத்தில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்பகோணத்தில் பெயிண்ட் அடித்தபோது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள யானைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) பெயிண்டர். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைகழகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் பல்கலைகழகத்தின் 5-வது மாடியில் கயிறு கட்டி கொண்டு பெயிண்ட் அடித்தார். அப்போது திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×