என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லாவரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல லட்சம் மோசடி- ஏஜெண்ட் கைது
Byமாலை மலர்27 July 2019 9:06 AM GMT (Updated: 27 July 2019 9:06 AM GMT)
பல்லாவரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர் முகமது பைசல் (40). இவர் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வந்தார்.
ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இது போன்ற ஏஜென்சி உதவியுடன் முன்பதிவு செய்வது வழக்கம். ஐ.ஆர்.டி.சி.யின் இணைய தள முகவரியில் தான் ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் முகமது பைசல் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு முன்பதிவு டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.
அவசர தேவையை பொறுத்து பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்து வந்த தகவல் பரங்கிமலை ரெயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் வீரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் முகமதுபைசல் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவர் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது. போலி இ-மெயில் முகவரி மூலம் முறைகேடு செய்த முகமதுபைசலை கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த சோதனையின் போது அவரிடம் இருந்து லேப்டாப், 20 ஆயிரம் மதிப்புள்ள தக்கல் டிக்கெட்டுகள், சாப்ட்வேர் பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர் முகமது பைசல் (40). இவர் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வந்தார்.
ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இது போன்ற ஏஜென்சி உதவியுடன் முன்பதிவு செய்வது வழக்கம். ஐ.ஆர்.டி.சி.யின் இணைய தள முகவரியில் தான் ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் முகமது பைசல் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு முன்பதிவு டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.
அவசர தேவையை பொறுத்து பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்து வந்த தகவல் பரங்கிமலை ரெயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் வீரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் முகமதுபைசல் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவர் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது. போலி இ-மெயில் முகவரி மூலம் முறைகேடு செய்த முகமதுபைசலை கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த சோதனையின் போது அவரிடம் இருந்து லேப்டாப், 20 ஆயிரம் மதிப்புள்ள தக்கல் டிக்கெட்டுகள், சாப்ட்வேர் பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X