search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரத போராட்டம்
    X
    உண்ணாவிரத போராட்டம்

    மயிலாடுதுறை அருகே கரும்பு ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

    மயிலாடுதுறை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே தலைஞாயிறுராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தொ.மு.ச தலைவர் டிஎஸ்.குமார் தலைமையில் ஆலை நுழைவு வாயில் முன்பு ஆலை பணியாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான குத்தாலம்.கல்யாணம் கண்டன உரையாற்றினார். இதில் 2018-19ஆலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். அதே போல் ஆலைக்கு நிரந்தர மேலாண்மை இயக்குனர் நியமிக்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்பு அரவை அரசு உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் எஸ்.கமலநாதன். பீ.மோகன்.ஐ.ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×