என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம் - போலீஸ் அடித்து கொன்றதாக தந்தை புகார்
Byமாலை மலர்12 July 2019 3:00 PM GMT (Updated: 12 July 2019 3:00 PM GMT)
காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி எனது மகனை அடித்து கொன்று விட்டனர் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்ற வினோத் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் வினோத்தின் இறப்பு குறித்து அவரது தந்தை மூர்த்தி கூறியதாவது:-
எனது மகன் வினோத்தை விசாரணை என்ற பெயரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் அடித்து கொன்று விட்டனர். போலீஸ் நிலையத்தில் வினோத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தற்போது நாடகமாடுகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக கடலூர் மாவட்ட நீதிபதியை சந்தித்து நான் முறையிட்டேன். அப்போது எனது மகனை அடித்து கொலை செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளேன்.
எனது மகனின் சாவுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன். எனது மகனை பிரிந்து எங்களது குடும்பம் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்ற வினோத் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் வினோத்தின் இறப்பு குறித்து அவரது தந்தை மூர்த்தி கூறியதாவது:-
எனது மகன் வினோத்தை விசாரணை என்ற பெயரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் அடித்து கொன்று விட்டனர். போலீஸ் நிலையத்தில் வினோத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தற்போது நாடகமாடுகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக கடலூர் மாவட்ட நீதிபதியை சந்தித்து நான் முறையிட்டேன். அப்போது எனது மகனை அடித்து கொலை செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளேன்.
எனது மகனின் சாவுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன். எனது மகனை பிரிந்து எங்களது குடும்பம் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X