search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஆம்பூர் அருகே போலீஸ்காரர் வீட்டில் திருட்டு

    ஆம்பூர் அருகே போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் காட்பாடி அருகே சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா (40).

    இவர் கடந்த 6-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மறுநாள் இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வனிதா ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×