என் மலர்
செய்திகள்

அல்ஜிலானி
ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது
சென்னை ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது
சென்னை ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:
பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக கடந்த 28-ந் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. ஜோலார்பேட்டையில் ரெயில் நின்றபோது பொது பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் சீருடை அணிந்த வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டார்.
ரெயில் அதிகாலை 3.20 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அந்த வாலிபர் இறங்கி சென்றுவிட்டார். இதனால் பயணிகளுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.
அந்த வாலிபரை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் ரெயில்வே அதிகாரிகளிடம் அந்த படத்தை காட்டினார்.
அதைத் பார்த்த அதிகாரிகள், இதுபோன்ற டிக்கெட் பரிசோதகர் யாரும் பணியில் இல்லை என்றனர். தொடர்ந்து, இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலி டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலி டிக்கெட் பரிசோதகரை சென்னையில் கைவரிசை காட்டியபோது, ரெயில்வே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அவர் சேலத்தை சேர்ந்த அல்ஜிலானி (42) என்பதும், டிக்கெட் பரிசோதகர் சீருடையுடன் ரெயில் பணிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
அவர், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டிக்கெட் பரிசோதகர் போன்று சீருடை அணிந்து, ஆலப்புழாவிலிருந்து தன்பாத்வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரசில் பயணிகளிடம் பணம் வசூல் செய்தபோது கையும்களவுமாக சிக்கி சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.
Next Story






