என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பஸ் மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்2 July 2019 5:37 AM GMT (Updated: 2 July 2019 5:37 AM GMT)
விருதுநகரில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 82). இவரது மனைவி கமலம் (70). இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் மருமகன் சேகர் (52) உடன் சென்றார். காரை பொள்ளாச்சியை சேர்ந்த அய்யப்பன் (53) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை விருதுநகர்-மதுரை 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. விருதுநகர் போக்குவரத்து பணிமனை மேம்பாலம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது.
காருக்குள் இருந்த சுப்பிரமணியன், கமலம், சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவர் அய்யப்பனை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிருக்கு அபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 82). இவரது மனைவி கமலம் (70). இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் மருமகன் சேகர் (52) உடன் சென்றார். காரை பொள்ளாச்சியை சேர்ந்த அய்யப்பன் (53) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை விருதுநகர்-மதுரை 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. விருதுநகர் போக்குவரத்து பணிமனை மேம்பாலம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது.
காருக்குள் இருந்த சுப்பிரமணியன், கமலம், சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவர் அய்யப்பனை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிருக்கு அபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X