search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அடுக்கம்பாறை பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
    X

    வேலூர் அடுக்கம்பாறை பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

    வேலூர் அடுக்கம்பாறை பேருந்தில் மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை வள்ளலார் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் மார்க்கெட் கமிட்டியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி செல்வி (வயது 69). நேற்று மாலை வேலூரில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று புதிதாக 5 பவுன் தங்க செயின் வாங்கினார்.

    அதனை ஒரு பேக்கில் எடுத்து கொண்டு டவுன் பஸ்சில் அடுக்கம்பாறை சென்றார். அப்போது அவரது பையில் இருந்த தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். பஸ்சை விட்டு இறங்கிய பிறகுதான் நகை திருடு போனது தெரியவந்தது.

    இதுபற்றி வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்வி நகை கடையில் இருந்து வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கும்பல் நகை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    நகை எடுத்து செல்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×