என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
    X

    மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

    மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான நெட்பால் போட்டி வருகிற ஜூலை மாதம் 29, 30-ந் தேதிகளில் தத்தனூர் எம்.ஆர்.சி. வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மாணவர்கள் தேர்வு ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். 
    Next Story
    ×