search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மிட்டூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- ஆலங்காயம் செல்லும் சாலையில் இன்று காலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த குரிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. எனவே நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம் ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×