search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து
    X

    ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து

    ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமாகின.

    வாலாஜா:

    சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் நசீன்வுல்லாஅசேன் (வயது 50). ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூரில் ஷூ கம்பெனி நடத்தி வருகிறார். அதில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ஷூ கம்பெனி ஸ்டோர் ரூமில் திடீரென தீப்பிடித்து எரிந்து புகைவெளியேறியது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர். ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகின.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×