என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து
Byமாலை மலர்17 Jun 2019 11:05 AM GMT (Updated: 17 Jun 2019 11:05 AM GMT)
ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமாகின.
வாலாஜா:
சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் நசீன்வுல்லாஅசேன் (வயது 50). ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூரில் ஷூ கம்பெனி நடத்தி வருகிறார். அதில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஷூ கம்பெனி ஸ்டோர் ரூமில் திடீரென தீப்பிடித்து எரிந்து புகைவெளியேறியது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர். ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X