search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் பஸ்சை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்
    X

    ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் பஸ்சை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்

    ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் பஸ்சை சிறை பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    குடிநீர் பிரச்சினையை கண்டித்து சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சாலை மறியல்- ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த புரவி பாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்பட வில்லையாம். இது குறித்து அந்த கிராம மக்கள் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் வெள்ளி திருப்பூர் மெயின் ரோட்டில் திரண்டனர். பிறகு அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் ஆவேசத்துடன் சிறை பிடித்தனர். மேலும் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு அதிகாரிகளும், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘‘ஒரு மாதமாக சரியாக தண்ணீர் வருவதில்லை. அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று தான் தண்ணீர் பிடித்து காய்ச்சி வடிகட்டி குடித்து வருகிறோம். எனவே எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வையுங்கள். முறையாக குடிக்க தண்ணீர் வழங்க இனியாவது நடவடிக்கை எடுங்கள்’’ என்று கூறினர்.

    பொதுமக்களிடம் தேவையான நடவடிக்கை எடுக்க உறுதி அளிப்பதாக அதிகாரிகள் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள், பெண்கள் மறியலை கை விட்டனர். சிறை பிடித்த அரசு பஸ்சையும் விடுவித்தனர்.

    Next Story
    ×