என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூரில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
Byமாலை மலர்13 Jun 2019 11:20 AM GMT (Updated: 13 Jun 2019 11:20 AM GMT)
ஆம்பூர் நகரில் தன்னார்வலர்களின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஆம்பூர் டவுன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுகின்றனர்.
மேலும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல், போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆம்பூர் டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என போலீசார் முடிசெய்தனர். அதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு ஆம்பூர் டவுன் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆம்பூர் போலீசார் கூறுகையில்:-
ரு.20 லட்சம் மதிப்பில் நகரின் 100 இடங்களில் முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்தவுடன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்தே நகரில் நடப்பவைகள் கண்காணிக்கப்படும். அதன் மூலம் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்க முடியும்.
போக்குவரத்து விதிமீறல் கண்டறியப்பட்டு, விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து சரிசெய்யப்படும். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும். ஆம்பூர் நகரம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றனர்.
ஆம்பூர் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுகின்றனர்.
மேலும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல், போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆம்பூர் டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என போலீசார் முடிசெய்தனர். அதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு ஆம்பூர் டவுன் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆம்பூர் போலீசார் கூறுகையில்:-
ரு.20 லட்சம் மதிப்பில் நகரின் 100 இடங்களில் முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்தவுடன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்தே நகரில் நடப்பவைகள் கண்காணிக்கப்படும். அதன் மூலம் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்க முடியும்.
போக்குவரத்து விதிமீறல் கண்டறியப்பட்டு, விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து சரிசெய்யப்படும். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும். ஆம்பூர் நகரம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X