search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே போர்வெல் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வாலாஜா அருகே போர்வெல் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    வாலாஜா அருகே போர்வெல் அமைக்க கோரி பொதுமக்கள் சித்தாத்தூர் அருகே சோளிங்கர் சாலையில் மறியல் செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள சின்ன தகரகுப்பம், பெருங்கால்மேடு, ஆகிய கிராமங்களுக்கு சித்தாத்தூரில் உள்ள பொதுப்பணிதுறைக்கு சொந்தமான ஏரியில் போர் வெல் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    கடந்த 3 மாதமாக போர்வெல் வறண்டு விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிராமக்கள் போராட்டம் மறியல் செய்து சித்தாத்தூர் ஏரியில் நேற்று புதிய போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு சித்தாத்தூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த தாசில்தார் பூமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அனுமதியில்லாமல் போர்வெல் அமைக்க கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.

    இன்று காலை பொதுப்பணித்துறை அனுமதியுடன் போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இன்றும் போர்வெல் அமைக்க தொடங்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சித்தாத்தூர் அருகே சோளிங்கர் சாலையில் மறியல் செய்தனர்.

    இது பற்றி தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். மறியலால் சோளிங்கர் ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×