என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது
Byமாலை மலர்21 May 2019 11:10 AM GMT (Updated: 21 May 2019 11:10 AM GMT)
திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகன் சரத்குமார் (வயது25). மினி வேன் டிரைவராக உள்ளார். இவரது வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் சம்பவத்தன்று தீ வைத்து சென்றனர்.
இவரது வீட்டிற்கு எதிரில் பழனியப்பன் மகன் மணிராஜன் (28) என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்க்கும் இவர்தான் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்ததாக சரத்குமார் சந்தேகப்பட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் நேற்று மணிராஜனை அரிவாளால் சரத்குமார் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X