என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை
Byமாலை மலர்20 May 2019 9:41 PM GMT (Updated: 20 May 2019 9:41 PM GMT)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
சீருடையிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும் கடந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய சீருடையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பச்சை நிற அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் சீருடையாக வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
சீருடையிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும் கடந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய சீருடையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பச்சை நிற அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் சீருடையாக வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X