search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி அருகே கார் மோதி 2 டிரைவர்கள் பலி
    X

    வேளாங்கண்ணி அருகே கார் மோதி 2 டிரைவர்கள் பலி

    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அங்கமுத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). நாமக்கல் மாவட்டம் மோகனூர் சின்னத்தம்பி பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இருவரும் பொக்லைன் எந்திர டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை காரை நகர் அருகே சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற கீழையூர் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருக்குவளை தாலுகா மேல வாழக்கரை முனியன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×