என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 May 2019 11:33 AM GMT (Updated: 15 May 2019 11:33 AM GMT)
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்காணம்:
டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கிழக்கு கடற்கரையோரம் மரக்காணம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை நடுக்குப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வயல்களில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கக் கூடாது. இந்த திட்டம் தொடங்கினால் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிந்து விடும். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை ஏற்படும்.
எனவே விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கிழக்கு கடற்கரையோரம் மரக்காணம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை நடுக்குப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வயல்களில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கக் கூடாது. இந்த திட்டம் தொடங்கினால் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிந்து விடும். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை ஏற்படும்.
எனவே விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X