search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மரக்காணம்:

    டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கிழக்கு கடற்கரையோரம் மரக்காணம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இன்று காலை நடுக்குப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வயல்களில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கக் கூடாது. இந்த திட்டம் தொடங்கினால் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிந்து விடும். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை ஏற்படும்.

    எனவே விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×