search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம்
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் கோபி (40). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் காணாமல் போனதாக அதிகாரிகளிடமும்,பஸ் நிலைய போலீசிலும் கோபி புகார் அளித்தார். இதன் காரணமாக போக்குவரத்து அதிகாரிகள் கோபிக்கு பணி வழங்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு அறையில் இருந்த கோபி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் கோபியை பரிசோதனை செய்த போது கோபி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி வழங்கப்படாததால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபி மாரடைப்பால் உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×