search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் கமிஷனில் புகார்
    X

    கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் கமிஷனில் புகார்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்த கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்கு தடை செய்ய வேண்டும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும், மேலும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் அவர் அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    Next Story
    ×