என் மலர்
செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில வாலிபர் பலி
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 1-வது நடை மேடையில் ரெயிலுக்காக நூற்றுக்கணக்கானோர் காத்து கொண்டு இருந்தனர்.
அப்போது 1-வது நடை மேடையில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வாலிபர் மீது கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் இறந்தார். ரெயிலுக்காக காத்து நின்ற பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறினர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வட மாநில வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் சிகப்பு நீளக்கோடு போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.






