என் மலர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.3½ லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்30 April 2019 2:03 PM IST (Updated: 30 April 2019 2:03 PM IST)
திருப்பத்தூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கபட்டு சோதனை செய்யபட்டது. தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது.
வாக்கு எண்ணிக்கை நடக்காததால் தேர்தல் விதி அமலில் உள்ளது. இதனால் மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் 39 பறக்கும் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.
திருப்பத்தூர் பெங்களூர் ரோட்டில் நள்ளிரவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பசலிகுட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவர் காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரில் பறக்கும்படைசோதனையில் சிக்கிய ரூ.3½ லட்சத்துடன் அதிகாரிகள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கபட்டு சோதனை செய்யபட்டது. தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது.
வாக்கு எண்ணிக்கை நடக்காததால் தேர்தல் விதி அமலில் உள்ளது. இதனால் மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் 39 பறக்கும் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.
திருப்பத்தூர் பெங்களூர் ரோட்டில் நள்ளிரவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பசலிகுட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவர் காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரில் பறக்கும்படைசோதனையில் சிக்கிய ரூ.3½ லட்சத்துடன் அதிகாரிகள்.
Next Story
×
X