என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
    X

    முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

    முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55) பெயிண்டர். இவர் இன்று காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதிதாக கட்டிவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரை விசாரித்தார்.

    Next Story
    ×