search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலி கர்ப்பம்- திருமணம் செய்ய மறுத்த காதலன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது
    X

    காதலி கர்ப்பம்- திருமணம் செய்ய மறுத்த காதலன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

    கும்பகோணத்தில் காதலியிடம் தனிமையில் இருந்ததில் கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அழகாபுத்தூர் அருகே அண்ணா நகர் சேர்ந்தவர் வீரமுத்து மகள் ஆஷா (வயது 17). அதே பகுதியை சேர்ந்த ராமன் (24) கூலி தொழிலாளி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆஷாவுடன் பலமுறை ராமன் தனிமையில் இருந்து வந்தார். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

    இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராமனை வலியுறுத்தினார். ஆனால் அவர் கேட்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து ஆஷா கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×