என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்த சம்பவம் - ரெயிலில் சிக்கி பெண் உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்23 April 2019 12:04 PM GMT (Updated: 23 April 2019 12:04 PM GMT)
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் சிக்கி பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் நேற்று மாலை திருப்பத்தூர் காக்கங்கரை இடையேயான தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பூரை சேர்ந்தவர் உதேஷ்குமார் (33). இவர் நேற்று இரவு ஜோலார்பேட்டை 1-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்ற ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நசீயா இவர் இன்று காலை ஆம்பூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
இதுகுறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் நேற்று மாலை திருப்பத்தூர் காக்கங்கரை இடையேயான தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பூரை சேர்ந்தவர் உதேஷ்குமார் (33). இவர் நேற்று இரவு ஜோலார்பேட்டை 1-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்ற ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நசீயா இவர் இன்று காலை ஆம்பூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
இதுகுறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X