என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடைத்தையில் சந்தேகம் - காதல் மனைவி தலையை துண்டித்து கொன்ற கணவன்
Byமாலை மலர்16 April 2019 12:21 PM GMT (Updated: 16 April 2019 12:21 PM GMT)
காதல் மனைவியை கணவரே கழுத்தை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:
பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வருபவர் முனியப்பன்(வயது 28). இவரது மனைவி பெயர் நிவேதா (19) இருவரும் கர்நாடக மாநிலம் சிமாகோ மாவட்டம் ஏலே பகுதியை சேர்ந்தவர்கள்.
இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வேலைக்கு போய் வந்தனர்.
முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதா மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு டிப்பார்ட்டுமெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.
மனைவியின் நடத்தை மீது கணவன் முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் தலைக்கேரிய முனியப்பன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி என்றும் பாராமல் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து துண்டித்தார்.
தலை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் நிவேதா பரிதாபமாக இறந்தார்.
பிறகு தலையையும் உடலையும் தனித்தனி துணியால் மூடிக்கொண்டு வாய்க்காலில் வீச மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தார்.
எருக்ககாட்டு வலசு பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற மக்களுக்கு முனியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் பின்னால் மனைவி உடலின் கால் பகுதி தரையில் உரசிய படி வந்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது,
இதனால் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை விரட்டி சென்றனர். பொதுமக்கள் தன்னை விரட்டி வருவதை கண்ட முனியப்பன் பைக்கை முறுக்கி வேகமாக ஓட்டினார்.
பெரியமிளாமலை வாய்க்கால் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முனியப்பன் கீழே விழுந்தார். உடனே வாய்க்காலில் குதித்து மறுகரையில் ஏற தப்பி ஓடினார்.
அவரை விரட்டிய இளைஞர்களும் விடவில்லை. அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
பிறகு முனியப்பனை வி.ஏ.ஓ. ஆல்பர்ட் ஓப்படைத்தனர். அவர் பெருந்துறை போலீசில் முனியப்பனை ஒப்படைத்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வருபவர் முனியப்பன்(வயது 28). இவரது மனைவி பெயர் நிவேதா (19) இருவரும் கர்நாடக மாநிலம் சிமாகோ மாவட்டம் ஏலே பகுதியை சேர்ந்தவர்கள்.
இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வேலைக்கு போய் வந்தனர்.
முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதா மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு டிப்பார்ட்டுமெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.
மனைவியின் நடத்தை மீது கணவன் முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் தலைக்கேரிய முனியப்பன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி என்றும் பாராமல் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து துண்டித்தார்.
தலை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் நிவேதா பரிதாபமாக இறந்தார்.
பிறகு தலையையும் உடலையும் தனித்தனி துணியால் மூடிக்கொண்டு வாய்க்காலில் வீச மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தார்.
எருக்ககாட்டு வலசு பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற மக்களுக்கு முனியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் பின்னால் மனைவி உடலின் கால் பகுதி தரையில் உரசிய படி வந்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது,
இதனால் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை விரட்டி சென்றனர். பொதுமக்கள் தன்னை விரட்டி வருவதை கண்ட முனியப்பன் பைக்கை முறுக்கி வேகமாக ஓட்டினார்.
பெரியமிளாமலை வாய்க்கால் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முனியப்பன் கீழே விழுந்தார். உடனே வாய்க்காலில் குதித்து மறுகரையில் ஏற தப்பி ஓடினார்.
அவரை விரட்டிய இளைஞர்களும் விடவில்லை. அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
பிறகு முனியப்பனை வி.ஏ.ஓ. ஆல்பர்ட் ஓப்படைத்தனர். அவர் பெருந்துறை போலீசில் முனியப்பனை ஒப்படைத்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X