search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் தொழிலாளி கொலையில் 5 பேர் கைது
    X

    திருப்பூரில் பனியன் தொழிலாளி கொலையில் 5 பேர் கைது

    திருப்பூரில் ரூ. 300 தகராறில் பனியன் தொழிலாளியை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்த 6 பேர் கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் கார்த்திக் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. கார்த்திக் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    அதில் சரவணன், ராஜா, வெங்கடேஷ், முத்துக்குமார் மற்றொரு ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு அணியாகவும், கார்த்திக் ஒரு அணியாகவும் ரூ. 300 பந்தயம் கட்டி கிரிக்கெட் விளையாடினோம்.

    விளையாட்டில் எங்கள் அணி தோல்வி அடைந்து விட்டது. அதற்கான பணத்தை கார்த்திக் கேட்டார். ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எங்கள் பகுதிக்கு வந்த கார்த்திக் எங்களை தரக்குறைவாக பேசினார். இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினோம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் தான் என நினைத்து இருந்தோம். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×