search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமழிசை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
    X

    திருமழிசை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

    திருமழிசை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாய்பேட்டை:

    திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ருக்மணியம்மாள் (வயது 60). இன்று காலைஅவர் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்கு வந்து நின்றார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ருக்மணியம்மாள் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ருக்மணியம்மாள் உயிரிழந்தார். வெள்ளவேடு போலீசார் ருக்மணியம்மாளின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய துணை பொறியாளர் விஜயசங்கர் தலைமையில் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×