என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படையினர் ஜீப் மரத்தில் மோதல்- போலீஸ்காரர் பலி

கும்மிடிப்பூண்டி:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி ஒரு ஜீப்பில் சென்றனர்.
ஜீப்பை டிரைவர் கண்ணன் ஓட்டினார். அதில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்த கோவிந்தசாமி (வயது 55) மற்றும் போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், பெண் காவலர் இந்துமதி ஆகியோர் இருந்தனர்.
புதுவாயல் அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய போலீஸ்காரர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகரன், டிரைவர் கண்ணன், போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், இந்துமதி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் குணசேகரன், கமலநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான கோவிந்தசாமியின் சொந்த ஊர் தொளவேடு காலனி ஆகும். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தொடர் பணி மற்றும் அதிகாலை நேரத்தில் சென்றதால் டிரைவரின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
