search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுகார்பேட்டை நகை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது
    X

    சவுகார்பேட்டை நகை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது

    சவுகார்பேட்டை நகை பட்டறையில் 6 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் பட்னாஸ். இவர் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு புனேயை சேர்ந்த ராகுல் கவுதம் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 25-ந் தேதி நகை பட்டறையில் இருந்த 6 கிலோ 200 கிராம் தங்க கட்டியை திருடிக்கொண்டு ராகுல் கவுதம் மாயமாகி விட்டார்.

    இதுகுறித்து யானைகவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தங்க கட்டியை திருடிய ராகுல் கவுதம் மற்றும் அவரது கூட்டாளிகளான புனேயை சேர்ந்த ஹேமந்த் பவார், லோனார் ஹோரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.

    தங்கம் திருட்டுக்கு அவர்களுக்கு வேறு யாரேனும உதவினார்களா? தங்கத்தை எங்கு விற்றனர் என்பது குறித்து 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×