search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சலில் தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த மீனவர் பலி
    X

    குளச்சலில் தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த மீனவர் பலி

    குளச்சல் அருகே தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குளச்சல் கோடிமுனை சைமன் காலனி பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 59). மீனவர்.

    இவர் கடந்த 3-ந்தேதி குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்ற காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

    அந்த பாட்டிலில் காருக்கான பெட்ரோல் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் இருந்த பெட்ரோலை குடித்தார். இதில் அவர் மயங்கி கிழே விழுந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டென்னிஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×