என் மலர்
செய்திகள்

மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்
வேதாரண்யம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர் விஜயகுமார்(வயது30). அதே ஊரை சேர்ந்த காளியப்பன் (45), செல்வராஜ் (55), விஜி (38) ஆகிய 4 பேரும் ஆறுமுகம் என்பவருக்கும் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். வெள்ளபள்ளம் கடற்கரையில் இருந்து 6 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது விஜயகுமார் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமானார். இதை பார்த்த சக மீனவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஜயகுமாரை தேடும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர் விஜயகுமார்(வயது30). அதே ஊரை சேர்ந்த காளியப்பன் (45), செல்வராஜ் (55), விஜி (38) ஆகிய 4 பேரும் ஆறுமுகம் என்பவருக்கும் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். வெள்ளபள்ளம் கடற்கரையில் இருந்து 6 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது விஜயகுமார் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமானார். இதை பார்த்த சக மீனவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஜயகுமாரை தேடும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






