search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருசுகுப்பத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல்- 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    குருசுகுப்பத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல்- 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குருசுகுப்பத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    குருசுகுப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). தச்சு தொழிலாளி இவருடைய மனைவி சுஜாதா. இவர்களது மகள் தன்சியா. இவர் புஸ்சி வீதி செட்டித் தெருவில் டியூசன் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ரமேஷ் டியூசனுக்கு சென்ற தனது மகள் தன்சியாவை அழைத்து கொண்டு வெளியே வந்தார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் அங்கு வந்தார். அப்போது இருவருடைய மோட்டார் சைக்கிளும் உரசுவது போல் சென்றது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் ரமேஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜேஷ் அவரது உறவினர் ராஜ்குமார், சூர்யா, கோகுல் ஆகியோரை அழைத்துக் கொண்டு கத்தி, கம்பு, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரமேஷ் வீட்டுக்கு சென்று ரமேசை தாக்கினர். இதை தடுக்க முயன்ற ரமேஷ் மனைவி சுஜாதாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இதில், காயம் அடைந்த ரமேஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து முத்தியால் பேட்டை சோலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார். 
    Next Story
    ×