search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தூக்குபோட்டு தற்கொலை

    தர்மபுரி அருகே வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே உள்ள அன்னசாகரத்தை அடுத்த கிழவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (25). எலக்ட்ரீசியனான இவர் அதியமான்கோட்டை அருகே உள்ள ஜாலி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மகள் நந்தினியை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் சிவா சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தனது மனைவி நந்தினியிடம் அவரது தாயார் வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கேட்டார். இதற்காக அவர்களும், 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொடுத்து உதவினர்.

    இதைத்தொடர்ந்து சிவா மீண்டும் தனது மனைவியிடம் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கேட்டார். 
    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நந்தினி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு  சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் நந்தினி தற்கொலை செய்து கொண்டதால் அவரது உறவினர்களிடம் உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×