என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே பால் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்30 March 2019 10:18 AM GMT (Updated: 30 March 2019 10:18 AM GMT)
மதுரையில் இருந்து தேனி சென்ற பால் வேன் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியானார்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 27). இவர் மதுரை ஆவின் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலையில் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பாலை கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று நள்ளிரவு பெரியசாமி வேனில் தேனிக்கு புறப்பட்டார். உசிலம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த உதவியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 27). இவர் மதுரை ஆவின் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலையில் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பாலை கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று நள்ளிரவு பெரியசாமி வேனில் தேனிக்கு புறப்பட்டார். உசிலம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த உதவியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X