என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் மர்ம மரணம்
Byமாலை மலர்28 March 2019 10:20 AM GMT (Updated: 28 March 2019 10:20 AM GMT)
திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் மர்மமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் லோகேஸ்வரன் (வயது 32). இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள தம்பிதோட்டம் காந்தி கிராம குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு மறு வீடு சம்பிரதாயத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இன்று காலை குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று காலையில் கேட் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் லோகேஸ்வரன் (வயது 32). இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள தம்பிதோட்டம் காந்தி கிராம குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு மறு வீடு சம்பிரதாயத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இன்று காலை குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று காலையில் கேட் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X