என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம் - சரத்குமார் அறிவிப்பு
    X

    சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம் - சரத்குமார் அறிவிப்பு

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நிர்வாகியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Sarathkumar
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கிச்சா ரமேஷ், குணசேகரன், கிரிபாபு ஆகியோருடன் சேர்ந்து கட்சிக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்துடன் தவறாக பேசிவரும் முன்னாள் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.ராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.
    அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிப் பணிகள் ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sarathkumar
    Next Story
    ×