என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் ரங்கசாமி முதல்-அமைச்சராவார்- அன்பழகன் சொல்கிறார்
Byமாலை மலர்10 March 2019 4:40 PM GMT (Updated: 10 March 2019 4:40 PM GMT)
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி அமருவார் என்று அன்பழகன் எம்எல்ஏ பேசியுள்ளார்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட யாரும் முன் வரவில்லை.
வேட்பாளர் கிடைக்காத காரணத்தால் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியின் மகனை போட்டியிட கோரி காங்கிரசார் முட்டி போட்டு காத்திருக்கின்றனர். வேட்பாளர் கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி தடுமாறுகிறது.
எங்களிடம் கேட்டால் நாங்கள் வேட்பாளர் தர தயாராக உள்ளோம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி அமருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X