search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்
    X

    வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்

    வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் சஞ்சய் (வயது9). கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பகுதியில் படிக்கும் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜீவா, 9-ம் வகுப்பு மாணவர் சரண்ராஜ் ஆகியோருடன் நேற்று காலை பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்றான். பின்னர் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் மாயமாகி உள்ளனர்.

    இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×