search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

    இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த பண்ட அள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் சிந்து (வயது 19). இவர் நல்லம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

    கடந்த 7-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் இண்டூர் போலீஸ் நிலையத்தில் எர்ரபையனஅள்ளியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் கலையரசன் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியையும், கலையரசனையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×