search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாத்திர வியாபாரி பலி
    X

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாத்திர வியாபாரி பலி

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாத்திர வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கோணப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 60). இவரது மகன் முருகன் (வயது 42). இவர் மொபட்டி வண்டியில் பாத்திரங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். முருகனும், அவரது தாயார் ரஞ்சிதமும் மொபட்டில் மகேந்திர மங்கலத்தில் உள்ள உறவினரின் மகனை அழைத்து வருவதற்காக சென்றனர். அப்போது செல்லும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து முருகன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத் தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    ரஞ்சிதத்திற்கு தொடர்ந்து சிகிசசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×