search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி உறையூரில் வீட்டில் பிணமாக தொங்கிய கொத்தனார்
    X

    திருச்சி உறையூரில் வீட்டில் பிணமாக தொங்கிய கொத்தனார்

    திருச்சி உறையூரில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் வைக் கோல்காரதெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலெட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வீட்டில் வேட்டியால் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். 

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று ராஜா உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு ராஜா தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜா தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாகவும் இதை மனைவி  மகாலட்சுமி தட்டி கேட்டதால் தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் இரவு குடித்து விட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டு இதில் மனமுடைந்த ராஜா இரவு 10 மணிக்கு மனைவி குழந்தைகள் தூங்கிய பிறகு வேட்டியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும்  கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×