search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு
    X

    சீர்காழி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

    சீர்காழி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஆசிரியை கை முறிந்தது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பட்டவர்த்தி தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பாரதி (வயது 32). ஆசிரியை. அதே பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது 50). தலைமை ஆசிரியை. இருவரும் கீழபெரும்பள்ளம். அரசு உதவிபெறும் பள்ளியில் வேலைபார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பணி முடிந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பாரதி ஓட்டினார்.

    அப்போது சீர்காழியை அடுத்த காரைமேடு அருகே சென்றபோது, பின்னால் முகமுடி அணிந்தப்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர் திடீரென பாரதி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். அப்போது மொபட் கீழே சாய்ந்ததால் கலைமதியின் கையில் அடிபட்டு கை முறிந்தது.

    பிறகு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவின் காட்சிகளை வைத்து, நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×