என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
Byமாலை மலர்27 Feb 2019 10:19 AM GMT (Updated: 27 Feb 2019 10:19 AM GMT)
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகுவதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaUniversity
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.
அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் பதவி விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதவி விலகலால் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பதில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்று தெரிகிறது. #AnnaUniversity
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X