search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் அரசு பள்ளி மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    பண்ருட்டியில் அரசு பள்ளி மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை

    பண்ருட்டியில் அரசு பள்ளி மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் சண்முகம்(57) இவரது மகன் ரோஸ்பாண்டியன்(வயது 15). இவர் இதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோஸ்பாண்டியன் திடீரென பூச்சிமருந்து குடித்தார். அவரை ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ரோஸ்பாண்டியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் வகுப்பறையில் 2 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×