search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - முதல்வருக்கு நளினி மீண்டும் வேண்டுகோள்
    X

    சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - முதல்வருக்கு நளினி மீண்டும் வேண்டுகோள்

    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், நளினி ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.



    இந்நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜிவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    Next Story
    ×